அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியைப் புகுந்த இடமாகவும், கனடாவை (Scarborough) வதிவிடமாகவும் கொண்ட தங்கமணி செல்வவிநாயகமூர்த்தி அவர்கள் 07-08-2012 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இலக்குமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான நாகராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்
செல்வவிநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கஜந்தி, மாதுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கர்ஷன் அவர்களின் அன்பு மாமியும்,
ஞானம்மா, ஞானரத்தினம், ஞானலிங்கம், ஞானேஸ்வரி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.