அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, மல்லாகம் தாமரை இல்லம் துர்க்காபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ஞானேஸ்வரன் அவர்கள் 19-08-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகராஜா, பொன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அப்பாகுட்டி, காலஞ்சென்ற சின்னம்மா, கனகம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
பாமதி(பபி - பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் - தெல்லிப்பளை) அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா(யாழ் பல்கலைக்கழகம் 1ம் ஆண்டு மாணவி), கபிலன்(கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கருணைராஜா, சிதம்பரநாதன்(இலங்கை), தேவராஜா(இலங்கை), தர்மலிங்கம்(கனடா), சகாதேவன்(இலங்கை), ஜீவசகாயம்(கனடா), சுபாஜினி(இலங்கை), ஜெயகௌரி(கனடா), பூமணி(இலங்கை), உமாசுதன் சண்முகராஜா(சுதன்), செந்தூரன் சண்முகராஜா, ரேவதி சண்முகராஜாஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2012 திங்கட்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று கல்லூப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.