யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா மார்க்கம் நகரில் வசித்து வந்தவருமாகிய கௌரியம்மா மாணிக்கம் அவர்கள் 17-08-2012 வெள்ளிக்கிழமை அன்று பகவான் சத்திய சாயி பாபாவின் பாதக்கமலம் அடைந்துள்ளார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரன்(கனடா), இரவிச்சந்திரன்(சாயி இல்லம் நல்லூர் - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாராணி, ஜனனி ஆகியேரின் அன்பு மாமியாரும்,
மிதுனன், தனுஷன், ரிஷிவரன், துவாரகன், யாதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.