உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பரமசாமி அவர்கள் 01-09-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விசுவலிங்கம், இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவபாமா, அருள்பாமா(இலங்கை), பமசுதன்(சுவிஸ்), சத்தியபாமா(இலங்கை), கேதிசபாமா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி(அதிபர்), காலஞ்சென்ற யோகம், காலஞ்சென்ற செல்லமுத்து, பரிமளம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினயகதேவன், குகதாஸ், பத்மநாதன், சிறிதரன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஊர்மிளா, சுகிசன், கேமதா, கஜனன், தர்மி, திவ்யா, செளம்யா, உசாந்தன், ரகுவரன், அதிரதன், அதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-09-2012 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01.00 மணிதொடக்கம் பி.ப 03.00 மணிவரை நடைபெற்று வல்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.