வல்வெட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சிவஞானம் அவர்கள் 25-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் மகேஸ்வரியின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வதுரை கதிராசிப்பிள்ளையின் அன்பு மருமகளும்,
சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி, ரஜெனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜேசன், ரையன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சலீனா அவர்களின் பாசமுள்ள அம்மம்மாவும்,
சவுந்தரநாயகி(இலங்கை), விமலாதேவி(அவுஸ்திரேலியா), சாந்தினி(சுவிற்சலாந்து), மஞ்சுளா, மாலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.