நெடுந்தீவு மேற்கு தம்புடையார் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு முத்துக்குமாரு அவர்கள் 20.07.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கதிராசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவிம்பிள்ளை தம்பதியரின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மாவின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா மருதலிங்கம், தங்கம்மா, கண்மணி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவாகளான பொன்னையா, தையலம்மை, குட்டிப்பிள்ளை, கந்தையா, காமாட்சி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னத்தங்கம், சுப்பிரமணியம்(அதிபர்) குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபாலப்பிள்ளை(கிராமசேவையாளர்), சிவஞானம்(தேனி - கிராமசேவையாளர்) ஆகியோரின் உடன்பிறவாசகோதரரும்,
தர்மரட்ணம்(வரதன் மாஸ்டர் - இலண்டன்), குணரட்ணம்(மல்லாகம் நீதிமன்றம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயலதா(இலண்டன்), கருணகலாதேவி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபியதர்சன்(இலண்டன்) அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.07.2010 புதன்கிழமை அன்று பி.ப. 4 மணியளவில் நெடுந்தீவு மேற்கு இந்து மயானத்தில் நடைபெற்றது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.