வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் , யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணசாமி ஞானவேல் அவர்கள் 23.07.2010 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை மரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிட்டிணசாமி ,செல்வசுவமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மகனும், தங்கமலர், காலஞ்சென்ற இராசையா(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சந்திரகாந்தா(பவுண்) அவர்களின் அன்புக்கணவரும்,
துஷ்யந்தன், கிரிஷ்ணராமன், டிலக்க்ஷிகா ஆகியோரின் அன்பு தந்தையும்,
லாவண்யாவின் அன்பு மாமனாரும்,
குமாரவேல், அம்மன்(இந்தியா), இரத்தினவேல்,தங்கவடிவேல், விதுரன், தேவிகா, குட்டிராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
பாபுராஜா(கனடா), காலஞ்சென்ற தவராசா(இலங்கை), மற்றும் வசந்தகுமார்(லண்டன்), சூரியகுமாரி(இந்தியா), தங்ககட்டி, ராணி, தேவா, சந்திரவதனா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.
இவ் அறிவித்தல் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி: blumenheckstr 27 75177 pforzheim Germany.
எங்கள் திருவிளக்கே எங்களை ஆறாத்துயரில் தவிக்க விட்டு எங்கே சென்றீர்?
காலை வேளையில் புன்னகை சொரிந்து வேலைக்கு சென்றீர் மறு புன்னகையை வழிவேல் விழிவைத்து காத்திருந்தோம் - இடிபோல் வந்தது உங்கள் பிரிவுச்செய்தி
நாங்கள் எங்கே தேடுவோம் உங்களை நீங்கள் எங்கே சென்றீர்கள்? நாங்கள் விழிகளை திறந்து தேடுகிறோம்..தேடுகிறோம்...தேடுகிறோம்...