திரு முருகுப்பிள்ளை மாணிக்கவாசகர்
(முன்னைநாள் கப்பற் கூட்டுத்தாபன அலுவலர்)
மலர்வு : 3 நவம்பர் 1925 — உதிர்வு : 17 யூன் 2010
திதி : 25 யூன் 2012

யாழ். அராலி வடக்கைப் பிறப்பி்மாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை மாணிக்கவாசகர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு கழிந்தாலும் - உன்
அன்பு வதனம் - எம்
மனதை விட்டு நீங்கவில்லை.

அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
தாய்க்கு அன்புத் தனயனாய்
தாரத்திற்கு காதல் கணவனாய்
குழந்தைகளுக்கு நல் வழிகாட்டியாய்
வாழ்ந்த காலமது - எம்
மனம் விட்டு நீங்காது.

உதவியென்று உன் நிழல் தேடி வந்தவர்க்கு
ஆலமரமாய் நின்று நிழற் குடை தந்தவனே
ஒற்றுமையின் மகத்துவத்தை - உன்
உறவுகளைக் கூட்டி போதித்த ஆசானே - நீ
வாழ்ந்த காலமது - எம்
நினைவை விட்டு நீங்கவில்லை.

உன் பேரக் குழந்தைகளுக்கு
வண்ண முகம் காட்டி - உன்
வடிவழகும் காட்டி
சித்திரக் கதை கூறி சிந்திக்கச் செய்தவனே - நீ
வாழ்ந்த காலமது - எம்
நினைவை விட்டு நீங்காது
ஓம் சாந்நி சாந்நி சாந்நி

தகவல்
ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழந்தைகள்.
தொடர்புகளுக்கு
சிவநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33616070798
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி:+33148665536
Loading..
Share/Save/Bookmark